ஜூலை 31 | பட்சபாதம் | தினசரி தியானம்

1 month ago

இயற்கையின் நடைமுறை நேர்மையே வடிவெடுத்தது. பட்சபாதம் அதனிடத்தில்லை. அதை எதிர்த்தால் துன்பம் வருகிறது; அதை அனுசரித்தால் இன்பம் வருகிறது. தவறுதலுக்குத் தண்டனையில்லாது போய்விட்டால் நேர்மைக்கு வெகுமதியும் இல்லாது போய்விடும். அத்தகைய நிலையே பட்சபாதம் எனப்படுவது. இறைவனுடைய ஆதிக்கத்தில் பட்சபாதத்துக்கு இடமில்லை. வினைக்கேற்ற வினைப்பயனை அவர் விதித்துள்ளார்.

Loading comments...